பிரான்ஸ் நாட்டில் தீப்பிடித்து எரிந்த 40 அடி உயர வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட இரு குழந்தைகளை பக்கத்தில் இருந்த மக்கள் எந்தகாயமும் இல்லாமல் காப்பாற்றினர்.பிரான்ஸின், கிரனோபில் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரென தீப்பிடித்தது. அப்போது வீடுகளுக்கு உள்ளே சிக்கியிருந்த நிலையில் தனது 3 வயது குழந்தையை, குடியிருப்பில் இருந்த தாய் ஒருவர் ஜன்னல் வழியாகத் தூக்கி வீசியுள்ளார். கீழே நின்றவர்கள் சரியான நேரத்தில் குழந்தையைப் பிடித்தனர்.
அடுத்த சில நொடிகளில் அதே போல தனது 10 வயது மகளையும் வெளியே தள்ளினார். அந்தச் சிறுமியையும் கீழே நின்றவர்கள் பத்திரமாகப் பிடித்தனர். இரு குழந்தைகளும் காயமின்றி காப்பாற்றப்பட்டனர். சமர்த்தியமாக செயல்ல்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.