கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளை பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாக இந்திய மருந்து நிறுவனமான ஜைடஸ் காடில்லா திட்டமிட்டுள்ளது.
உலகில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 மருந்து நிறுவனங்களில் ஒன்றான காடிலா கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை உருவாக்கிவருகிறது. இந்த நிலையில்
தடுப்பு மருந்து பற்றி அந்நிறுவன தலைவர் பங்கஜ் படேல் செய்தியாளர்களிடம் கூறும்போது மருந்து மீதானமுதல் கட்ட சோதனையும், மனிதர்கள் மீதான சோதனையும் இன்னும் 3 மாதங்களில் முடிய உள்ளதாகதெரிவித்தார்.

பரிசோதனை வெற்றியடைந்தால் அந்த மருந்தை ஆண்டுக்கு 10 கோடி எண்ணிக்கையில் காடில்லா நிறுவனம் உற்பத்தி செய்யுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.