கேரள தங்க கடத்தல் வழக்கை விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல உள்ளனர்.
அமீரக துணை தூதரக லக்கேஜுகளில் தங்கம் கடத்தப்பட்ட முறை, அதில் இருந்து கிடைத்த பணம் வாயிலாக நடந்த ஹவாலா பரிவர்த்தனை உள்ளிட்டவை குறித்து நேரில் சென்று அவர்கள் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட தங்கம் பல வழிகளில் கேரளா, தமிழகம் மற்றும் நாடு முழுதும் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில குழுக்களுடன் தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.