கர்நாடகாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது இந்த நிலையில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் ஒட்டிய இளைஞரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.பெங்களூருவில் உள்ள ELECTRONIC CITY மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் 1000 சிசி திறன் கொண்ட யமஹா பைக்கை வேகமாக இயக்கி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இளைஞரின் வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல் துறையினர் அந்த இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்து, அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்