கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் ஊடுருவியதால் அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கடந்த ஜூன் மாதம் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் படி இரு நாடுகளும் தங்களின் படைகளை விலக்கி கொண்டன.ஆனால் அங்கு படை விலக்கல் நடவடிக்கை முழுமை அடையவில்லை என இந்தியா நேற்று மறுத்து உள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பின் போது,முழுமையான படை விலக்கல் மற்றும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை கொண்டு வருவதில் நம்முடன் சீனா உண்மையாக உழைக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்..