இந்தியாவில் செல்போன் சேவை தொடங்கப்பட்டு 25ம் ஆண்டுகள் ஆவதையொட்டி தனது வாழ்த்துகளை மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கும், செல்போன் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கும் வகையில் , முகேஷ் அம்பானிவீடியோ வெளியிட்டுள்ளார்.
அவரது வீடியோவில் நமது நாட்டில் சுமார் 30 கோடி பேர் 2ஜி சேவையை மட்டும் பயன்படுத்தி வருவதாகவும், இதனால் அவர்களுக்கு அடிப்படை இணைய சேவையை கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் அதனால் 2 ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வந்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.