பிரான்சில் இருந்து 5 ரபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. நேற்றுமுன்தினம் பிரான்சில் இருந்து கிளம்பிய விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
விமானம் நிறுத்தப்படுவதற்கு முன் ஈரான் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தளம் குறி வைக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது. இதற்கிடையே அல் தஃப்ரா விமான நிலையம் அருகே ஈரான் ஏவிய ஏவகணை விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் ரபேல் ஜெட் விமானங்கள் கம்பீரமாக இந்தியாவை நோக்கி கொண்டிருக்கின்றன.