வேலையின்மை மற்றும் பொருளாதார பேரழிவு ஆகியவற்றின் உண்மையை மக்களிடமிருந்து மறைக்க முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டரில் கருத்தில் கடந்த 4 மாதங்களில் சுமார் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.
2 கோடி குடும்பங்களின் எதிர்காலமும் இருளில் மூழ்கியுள்ளது. பேஸ்புக்கில் தவறான செய்திகளையும், வெறுப்புகளையம் பரப்புவதன் மூலம், உண்மையை மக்களிடம் இருந்து மறைக்க முடியாது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.