தமிழகத்தில் நாளை தளர்வுகளற்ற 4-வது முழு ஊரடங்கு ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ளது, இதனால் நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும். ,தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி,மளிகைக் கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருக்கும்.
சாலைகளில் வாகனப் போக்குவரதுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவைமீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அத்தியாவசிய பொருட் களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும்,அமரர் ஊர்திகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பத்திரிகைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை எனவும் ஊடகத் துறையினர் செய்தி சேகரிக்க செல்லவும் தடை இல்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.