மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்த அறிவிப்பிற்கு, தேசிய அளவில் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில் அவர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதே போல்முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் இருமொழிக் கொள்கையை தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும், “தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம்” என்று கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்..