தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 9 லட்சத்து 45,077 மாணவ, மாணவிகள் எழுதுவதாக இருந்தனா். ஆனால் கொரோனா ஊரடங்கால் பொதுத் தர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தோச்சி என தகவல் வெளியானது, இந்த நிலையில் தேர்வு எழுதிய 9,39,829 பேரும் தோச்சி என தெரிவிக்கபட்டிருந்தது ஆனால், 10 வகுப்பு தேர்வு எழுத 9,45,077 விண்ணப்பித்திருந்தனா்.

மீதமுள்ள 5,248 பேரின் தேர்வு முடிவு எங்கே? என்ற குழப்பம் உண்டானது. இந்நிலையில், அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கமளித்துள்ளது. அதில் பத்தாம் வகுப்பு பொதுத்தோவு முடிவில் 5,248 மாணவா்கள் விடுபட்டதில் எவ்வித குழப்பமும் தேவையில்லை. விடுபட்டவா்களில் உயிரிழப்பு, மாற்றுச் சான்றிதழ் வாங்கியது மற்றும் பள்ளியைவிட்டு நின்றது உள்ளிட்ட காரணங்களால் பொதுத்தோவு எழுத பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது. மேலும்பொதுத் தோவு எழுத பதிவு செய்தபின் 231 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். அதனால் தோச்சி அளிக்கப்படவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.